Tuesday 28 September 2010

endhiran countdown

Planning to see Endhiran this weekend. Very exited... Lets whats there on this movie...
Published with Blogger-droid v1.6.0

Sunday 26 September 2010

கல்யாணம் பண்ணிப்பார்

அண்மையில் திருமண மண்டபம் பற்றி குறிப்பு ஒன்று தினமலரில் படித்தேன்.


கீழே இருப்பவை நான் கற்றது.  உங்கள் அனுபவங்களையும் சொல்லலாமே?


* நாள் வாடகையில் எதெல்லாம் சேர்க்க பட்டு இருக்கிறது என்று செக் செய்ய வேண்டும்.  நல்ல அனுபவம் உள்ள நபரை அழைத்து செல்ல வேண்டும்

*  பந்தல் : இது கல்யாண மண்டபத்தில் வாசலில் முன்னே எப்போதும் இருக்கும்.  சில இடத்தில் துணியிலும் பல இடத்தில் இரும்பிலும் இருக்கும்.  இது பத்து ஆண்டுக்கு  முன்பாக வேய்த்ததாக இருக்கும் - நமக்காக செய்தது இல்லை - (வேண்டாம் என்றும் கூற முடியாது).   ஆனால் இதற்கும் வாடகை உண்டு.

*  ஜெநேறேடர் : உபகோயம் செய்தாலும் இல்லாவிட்டாலும் இதற்கு வாடகை.   கரண்ட் கட் ஆனால்தான் தெரியும் வேலை செய்கிறதா என்று - முதலிலேயே செக் செய்யவில்லை என்றல் பிறகு 'மானாட மயிலாட' மாதிரி மேனேஜரிடம் டான்ஸ் ஆட வேண்டியதுதான் -  டீசல் செலவு டீசல் வாங்கி வர டிப்ஸ் தனி செலவு.

* மண்டபத்தில் வேலை ஆட்கள் எவ்வளவு பேர் என்று கேட்கவில்லை என்றால் நீங்கள் காலி.  இரண்டு மூன்று மண்டபம்கள் இருக்கும் இடத்தில் நாம் மட்டும் கல்யாணம் செய்தால் எல்லா வேலை ஆட்களும் பந்தி நேரத்தில் மட்டும் வந்து டென்ஷன் தருவார்கள் - மற்ற நேரத்தில் நான் இந்த மண்டபம் இல்லை 'annex' என்று பதில் வரும்.

* இதில் டம்பளர் டபரா செட், தட்டு முதலியன காணாமல் போனாலும் நாம் தான் தண்டம் அழ வேண்டும்

*  பாத்ரூம் எதுவும் க்ளீனாக இருக்காது - கேட்டால் பினாயில் ஊற்றி விட்டு போவர்.  வெய்யில் காலாமாக இருந்தால் ஓகே - குளிர் காலத்தில் கல்யாணம் செய்தால் சுடு தண்ணீருக்கு... வேறன்ன அதே மானாட... தான்!

*   எல்லாம் முடிந்து அப்படா என்று கிளம்ப நினைத்தால், வேலை ஆட்களின் மேஸ்திரி 'யாருக்கும் நீங்க ஒன்னும் கொடுக்க வேணாம் எனக்கு மட்டும் 500 ரூபா கொடுங்க நான் பாத்துக்கறேன் (!)' என்று வாங்கி கொண்டு எஸ்கேப் ஆவார், எல்லா வேலை ஆட்களும் தலையை சொரிந்து கொண்டு நிற்பார்கள்...

சும்மாவா சொன்னார்கள் கல்யாணம் பண்ணிப்பார் என்று?





பிள்ளையார் பிடிக்க...

 விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்.  சனி கிழமை தான் வருகிறது - கொழுக்கட்டை / பூஜை முதலியன செய்துவிடலாம்... ஆனால் ஒரு முக்கியமான கேரக்டர் வேண்டுமே?

நம் நாட்டில் இருந்தால் - ஊர் ஜே ஜே என்று இருக்கும்... ஒரு பைக்கும் பேகும் இருந்தால் போதும்... பிள்ளையாரில் இருந்து / வாழைப்பழம் / பல விதமான பூ / இலைகள் எல்லாம் வாங்கிவிடலாம்...

இங்கே சௌத்ஹாம்டன் (southampton) கண்டிப்பாக பிள்ளையார் கடையில் விற்க மாட்டான்... படம் (ஆபீஸ் பிரிண்டர் உபயம்) வைத்து செய்யவும் மனசு வரவில்லை.

என் மனைவி அப்போதுதான் களிமண் கிடைத்தால் "நானே பிள்ளையார் பிடிக்கிறேன்" என்றாள் - "தேவையா - ஆகற வேலையா சொல்லு - கொழுகட்டையே சுமார்தான் உனக்கு வரும்... இதில பிள்ளையார் வேறயா?" என்று கூறி விட்டு ஆபீஸ் போனேன்

வீட்டிற்க்கு வந்தால் சர்ப்ரைஸ் - தொப்பையும் தொந்தியுமாக இல்லாமல் 'kellogs speacial K cornflakes' சாப்பிடும் ஒரு அத்லெட் மாதிரி விநாயகர் "எப்பூடி" என்று பசங்க படத்தில் வரும் சிறுவன் போல சிரிக்கிறார் - என் மனைவி "early leraning centre" -இல் களிமண் வாங்கி வந்து பிள்ளையார் பிடித்து வைத்து இருந்தாள்.

பிள்ளையார் பிடிக்க பிள்ளையார் மாதிரியே வந்து இருந்தது... ப்ளாக் எழுத ஆரம்பிக்க இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் வருமா என்ன?

பூஜை முடிந்து பல நாட்கள் ஆகின்றது கரைக்க மனம் வராமல் அப்படியே இருக்கிறார் விநாயகர்!